Saturday, April 21, 2012

இனிப்பும் கசப்பும்


இனிப்பும் கசப்பும்

அன்றாடம் வாழ்கையிலே நாம் அடிக்கடி கேட்கும்,
"உண்மை கசப்பாயிருக்கிறதா?"
படிப்பதென்றால் அவனுக்கு அது வேப்பங்காயாக இருக்கிறது
கசப்பான மருந்துதான், ஆனால் குணமாகவேண்டும் என்பதற்காகச் சாப்பிடுகிறேன்

போட்டியில் வெற்றியீட்டிய இனிப்பான செய்தி கிடைத்தது
தன் விடயம் நடக்கவேண்டுமென்பதற்காக இனிக்கஇனிக்கப் பேசினார்
மேற்கண்ட வசனங்களைப்பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் சிந்தித்துப்பார்ப்போமானால் இரண்டு சுவைகள் அதில் உவமானமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அறுசுவை என்றும், அறுசுவை உணவு என்றும் பல்லாண்டு காலமாக எம்மவர் மத்தியில் சுவைபற்றிய விளக்கம் உண்டு. எனினும் இவற்றுள் இந்த இனிப்பு, கசப்பு என்ற இருசுவைகளே முன்னணியில் எவர் வாயிலும் உபயோகிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதிலும் இவை உணவு விடயத்தில் மட்டுமல்லாது உணர்வுகளின் வெளிப்பாடாகவும் அதிகம் பாவனையில் இருப்பதையும் நாம் நோக்கவேண்டும். விருப்பமி்ன்மையை கசப்பாகவும் விருப்பினை இனிப்பாகவும் உவமானப்படுத்துவது அன்றுமுதல் தொடர்வதையும் பார்க்கிறோம்.

எமது நாக்கு எல்லாச் சுவைகளையும் ஏற்கும் தன்மையுடையதே. அது தன்க்காக எந்தச் சுவைவையயும் விரும்பிக் கேட்பதில்லை. மேலும் உடல் நலத்திற்கு எல்லாச் சுவைகளும் கலந்த உணவே தேவையாகும். ஏனெனில் எல்லா உணவுப் பொருட்களும் இனிப்பு கசப்பு என்ற இருசுவைவகைகளுள் மட்டும் அடங்கிவிடவில்லை. எனவே உடலிற்குத் தேவையான ஊட்டத்திற்கு சுவைகளில் தவிர்ப்புச் செய்வது சாியன செயலாகக் கொள்ளமுடியாது.

இருப்பினும் மக்களது பாவனையில் கசப்பினைஒரு வேண்த்தகாத பொருளாகவும் இனிப்பு மனத்துக்கு இதமானதாகவும் கருதுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் முன் குறிப்பிட்டது போன்ற பேச்சுக்குக் காரணமாகின்றது.

நீரிழிவு நோயுள்ளவர்கள் இனிப்பானவற்றைத் தவிர்க்கவேண்டும். இல்லையேல் வியாதியை முற்றவைப்பதாகவே முடியும். பாகற்காய் கசப்பானதுதான், முள்ளங்கி முகம்சுழிக்க வைப்பதுதான். ஆனால் இவற்றை உண்ணும்படி ஆலோசனைகள் கூறப்படுகிறதே. இனிப்பான பண்டங்கள் பற்களைப் பாதிக்கும் எனவும் மருத்துவத்தில் கூறப்படுகிறது. கசப்பானவை என்பவை ஊறு விளைவிப்பதாகக் கூறப்பட்டதில்லை. இதுபற்றி நாம் இங்கு அதிகம் குறிப்பிட வரவில்லை. ஆனால் இங்கு எழுப்பப்படும் வினா எதுவெனில், இவ்வழக்கம் எப்படி, எப்போது மற்றும் ஏன் ஏற்பட்டது என்பதுதான்.

ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது ஒரு முக்கிய அம்சமாகும். மணிக்கட்டில் பார்க்கப்படும் நாடியானது வலது கையில் மூன்று, இடது கையில் மூன்று என ஆறு இடங்கள் உண்டு. வாதம், பித்தம், கபம் என்ற முப்பெரும் பகுதிகளுக்குள் நோய்களை வகைப்படுத்தி அவற்றின் பிரதிபலிப்பை மணிக்கட்டில உள்ள நாடிகளில் உணர்ந்துகொள்ளும் திறமை படைத்தவர்கள் இவ்வைத்திய முறைகளில் தேர்ச்சிபெற்ற வைத்தியர்கள். நாடிகளின் துடிப்பில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து அதற்கேற்ற விதத்தில் மருந்துகள், பத்திய முறைகள் வரையறுக்கப்படும்.

இன்று அலோபதி வைத்தியமும் நம்நாட்டு மருத்துவ முறைகளின் சிறப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் உணவே மருந்து என்பதும் ஒரு தத்துவமாகக் கொள்ளப்படுவதுண்டு. சுவைகளை வகைப்படுத்தி ஒவ்வொரு சுவையும் மனித தாதுக்களிடையே ஆட்சி செய்வதாகக் கொள்ளப்படலாம். இதனடிப்படையில் ஆறு நாடிகளுக்கும் ஆறு சுவைகளையும் ஏற்றவிதமாகக் கொண்டு ஊட்டத்தின் அளவினை அனுமானிக்க உதவுவதாகச் சொல்லப்படுகின்றது.

நாடியானது மணிக்கட்டில் பெருவிரல் பக்கத்தில் உள்ளங்கை முடிந்து முன்கை ஆரம்பமாகும் இடத்தில் அவதானிக்கப்படுகிறது. பெருவிரலுக்கு அடியில் முன்கையில் உள்ள மொழயின் அருகிலேயிருந்து மேல் நோக்கி வாதநாடி, பித்தநாடி, சிலேட்டுமநாடி என்ற ஒழுங்கில் காணப்படுகிறது. இது இரு கைகளுக்கும் பொருந்தும். இதன்படி சுவைகள் ஒவ்வொன்றும் பின்வருமாறு அமைகின்றன-


வலது                           இடது

நாடிகள்;             தாது         சுவை                     தாது       சுவை

வாதம்           இரததம்;     துவர்ப்பு                கொழுப்பு    புளிப்பு

பித்தம;           எலும்பு      உப்பு                  நரம்பு       கசப்பு

சிலேட்டுமம்;       தசை       இனிப்பு                 உமிழ்நீர்     காரம்
 



மேற்காட்டப்பட்டவாறு எமது உடலின் தாதுக்கள் ஒவ்வென்றையும் ஒவ்வொரு சுவை ஆளுகின்றது. மேலும் ஒரு விடயத்தை நாம் அறிந்துகொள்ளவேண்டும். நாவில் தென்படும் சுவையைக்கொண்டு சுவைக்கும் பொருளின் தன்மையை நாம் கண்டுகொள்ள இயலாது. உதாரணமாக, தேன் நாவிற்கு இனி்ப்பானதாகத் தோற்றினாலும் அதன் தன்மை கசப்புத்தான். (அதனாற்றான் தேன்போல இனிக்கப் பேசினார்” என்பதை நம்ப முடியாதவரின் பேச்சாக அன்று அர்த்தப்படுத்தினார்களோ?).

கசப்பின் முக்கியத்துவம் கருதி, அதாவது அது வழங்கும் ஊட்டத்தின் தேவைக்காகவே எமது மருத்துவ முறைகளில் தேனுக்கு அதிக மதிப்பளிக்கப் படுகிறது.

மேற்படி அட்டவளையின்படி, நமது நரம்பு சம்பந்தப்பட்ட வரை கசப்பான உணவு வகைகள் அவசியமாகிறது. தசை வளர்ச்சிக் இனிப்புத் தேவையாகிறது. இன்று நரம்புகளுடன் தொடர்புடைய நோய்கள் அதிகாித்துக் காணப்படுவதற்கு அதற்குத் தேவையான ஊட்டமுள்ள உணவு எடுத்துக்கொள்ளாததே காரணமாகலாம். இதற்காக, தசைவளர்ச்சி தேவையில்லை என்பதல்ல. தசைவளர்ச்சி ஓரளவிற்கு இருந்தாலே போதும். மேலும் அதனை வேண்டிய நேரங்களில் புதிப்பித்துக்கொள்ளலாம். ஆனால் நமது நரம்பு மண்டலம் அப்படியானதல்ல. சிலசமயங்களில் மீட்டுக்கொள்ள முடியாத அளவிற்குப் பாதிப்பு ஏற்படலாம்.

இன்றைய நரம்பு மண்டல பாதிப்பிற்கு எமது பழக்கங்களும் உணவு முறைகளும் ஓரளவு காரணம் என்றே கூறலாம். குழந்தைப்பருவத்திலிருந்தே இனிப்பு உகந்ததொன்றாகவும், கசப்பு ஏற்கப்பட முடியாததொன்றாகவும் மனிதில் பதிய வைக்கப்படுகிறது. கசப்பான மருந்து சாப்பிட்டவுடன் அதை மாற்ற இனிப்பினை வழங்குவது தவறல்ல. ஆனால் இது நடைப்முறைப் பழக்கத்தல் ஏற்பட்ட ஒன்றே தவிர, கரணமெதுவும் அங்கில்லை. சிறுவயது முதலே எல்லாச் சுவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்திருந்தால் இப்படி நிலை பின்நாட்களில் இருக்காது.

வேம்பு ஒரு மருத்துவர் எனக்கொள்ளலாம். வேம்பின் அமைத்துப் பகுதிகளுமே மனிதனுக்குப் பயன்படக் கூடியன. இது ஒரு நோய்நீக்கி என்பதனை, அம்மரத்தில் ஒட்டுண்ணிகள் பரவாமையிலிருந்தும், வேப்பம் பிண்ணாக்கு சிறந்த கிருமிநாசினி என்பதிலிருந்தும் அறியலாம். அதன் பாகங்கள் உள் எடுக்கவும் வெளிப் பாவனைக்கும் உகந்தனவாகும். வேம்பின் பயனை எழுதுவதானால் அது ஒரு தனிக் கட்டுரையாகிவிடும். இத்தனை சிறப்புப் பெற்ற வேம்பு கொண்டுள்ள சுவை கசப்புத்தான்.

இனிப்பு தசை வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. தசைகள் வலுவாக இருந்தாலே உடற்சோர்வின்றி இயங்கமுடியும். (சோர்வு என்பது வேறு, சோம்பல் என்பது வேறு என்பதை இங்கு நாம் கவனிக்கவேண்டும்).

காரம் ஓரளவு தேவை. நீர் போதியளவு அருந்துவதனால் காரத்தின் அளவு சிறிது குறையலாம். உணவு ஜீரணம் (சமிபாடு) அடைய உமழ்நீர் சுரக்க வேண்டும். உமிழ்நீர் சுரப்பிற்கு காரம் தேவை. ஆனால் அளவோடு. அளவிற்கு அதிகமானால் வேறு உடல் உபாதைகளுக்கு வழவகுத்துவிடும்.

இனிப்புப் பாவனையை அதிகப்படுத்தும் சுவைகளை மேற்பர்த்தோம். ஏனைய சுவைகளின் அவசியம் என்ன என்பதை மேற்படி அட்டவணையிலிருந்து அறிய முடியும்.

அடுத்து சற்று வெறுப்புக் குள்ளான சுவை புளிப்பு எனலாம்.
“அவனுக்கு இப்ப கொஞ்சம் புளிப்பேறிவிட்டது
“உனக்கென்ன புளிப்பா?“

கொழுப்பு அதிகமாகிவிட்டது என்பதான கருத்திலே இப்படியான பேச்சுக்கள் அமைவதுண்டு. உண்மைதான், கொழுப்பு அதிகமாகக்கூடாதே தவிர, தேவையில்லை என்பதல்ல. இங்கும் புளிப்பு சுவை இனிப்புக்கு ஈடாகாது என்பது போன்ற உணர்வின் வெளிப்பாட்டிலேயே “நரியும் திராட்சைப் பழமும்“ கதை உருவாகியுள்ளது.

இதுபோல, இனிப்புச் சுவையை முதன்மைப்படுத்தும் எவ்வளவோ விடயங்கள் தொன்றுதொட்டு வருகின்றமைக்கு ஏதாவது காரணம் உண்டா?

ஏனைய சுவையுடைய பண்டங்களின் தேவையும் உடலிற்கு முக்கியமானதாகவே இருந்தாலும், இந்த இனிப்பு என்ற ஒரு சுவைக்கு மட்டும் சிறப்பானது என்ற வகையில் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது எதனால்?

இனிப்புச் சுவையை விரும்பாதவர்களும் “இனிக்கிறதா, கசக்கிறதா? என்ற கேள்வியைக் கேளாமலில்லை. அவர்களிடமும் கேட்கப்படுகிறது  இது ஏன்?

என்ன, இதுவும் கசக்கிறதா, இனிக்கிறதா?


A Lesson


கடவுளின் பிரதான தொழில் என்ன?

ஒரு நாட்டில் மிகவும் தற்பெருமை பிடித்த ஆனால் உதார குணமும் கொண்ட ஒரு அரசன் அரசாட்சி செய்து வந்தான். மிகவும் அறிவாளியான பிரதம அமைச்சரையும் அவன் வைத்திருக்கத் தவறவில்லை. அநேகமாக அறிவுசார் விடயங்களை இருவரும் ஆராய்ந்துகொண்டே இருப்பார்கள். இந்நிலையில் ஒருநாள் அந்த அரசன் அமைச்சருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான். அமைச்சரே, இவ்வுலகில் ஒவ்வொருவரும் தமது வழக்கமான செயல்களை விட ஏதோ ஒரு குறிப்பிட்ட வேலையைப் பிரதானமாகக் கொண்டுள்ளனர். உதாரணமாக, அரசனான நான் ஆட்சி செய்கிறேன், சிப்பாய் போரிடுகிறான், வியாபாரி வியாபாரம் செய்கிறான், ஆசிரியர் கற்பிக்கிறார், குரு உபதேசம் செய்கிறார். ஆனால் இதுபோல் கடவுள் என்ன வேலையைப் பிரதானமாகச் செய்கிறார்? இதைத் தாங்கள் கூற முடியுமா? எனக் கேட்டான்.

அமைச்சருக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. அனைத்துக் காரியங்களையும் செய்பவர் கடவுள். அதில் பிரதானம் என்பது எது என்பதை அவர் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அரசே, என்மனதிலும் அதே கேள்வி உண்டு. நானும் அதுபற்றி யோசித்துப் பார்க்கவேண்டும்” என்றார் சாதுரியமாக. பிரதம அமைச்சர் அரசனோடு அரசாட்சி விடயங்கள் மற்றும் உலக விடயங்களைப் பற்றி விவாதிப்பவர், ஆலோசனைகளும் கூறுபவர். ஆனால் இது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விடயமாதலால் அவரால் உடனே எதுவும் கூற இயலவில்லை. அதற்குரிய விடை கூறுவதற்கும் சிரமம் உண்டு என நினைத்தார். எனவே, ஆன்மீகம் சம்பந்தப்பட்டது என்பதால் ஆன்மீகம் நிறைந்த குரு ஒருவரிடம் இதைக் கேட்கலாம் என அவர் கூறினார்.

அரசனும் தனது அரண்மனைக் குருவானவரை அழைத்து இந்தக் கேள்வியைக் கேட்டான். அவரும் சிறிது திகைத்துத்தான் போய்விட்டார். ஆயினும் அரசனின் கேள்விக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதால் யோசிப்பதற்கு அவகாசம் கருதி, தனக்கு ஒரு வாரகாலம் அவகாசம் தரும்படியும் அதன்பின் அதற்குப் பதில் தருவதாகவும் கூறி அந்நேரத்திற்குத் தப்பிக்கொண்டார். ஆயினும் அல்லும் பகலும் அதைப்பற்றியே சிந்தித்துப் பார்த்தபடி இருந்தார். இதற்கு எப்படியும் விடை கண்டே ஆகவேண்டும்.

இதே நிலையில் ஒருவாரம் கடந்தது. குரு இன்னமும் விடையைக் கண்டு பிடிக்கவில்லை. அரசனின் கோபத்திற்காளாகி தண்டனை பெறுவதா அல்லது நாட்டைவிட்டு ஓடிவிடலாமா எனக் கவலையுடன் வீட்டுத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அவரின் மாடுகளை மேய்ப்போன் அவர் கவலையுடன் இருப்பதை உணர்ந்து, அதற்கான காரணத்தைத் தான் அறியலாமா எனப் பணிவுடன் கேட்டான். அவரும் எல்லாவற்றையும் கூறி, கடவுள் செய்யும் வேலை என்ன என்று கேட்டால் எதைத்தான் குறிப்பிட்டுக் கூறமுடியும்?” என்றார். அந்த மந்தைமேய்ப்போன் பதில் சொல்வான் என்று அவர் எதிர்பார்க்கவும் இல்லை. 

ஆனால் அவனோ, குருவே, இதுதானா உங்கள் கவலை? அரசனிடம் நான் வந்து அதற்கான பதிலைக் கூறுகிறேன். என்னை அழைத்துப் போங்கள்” என்றான்.

குருவுக்கு யோசனையாகிவிட்டது. விபரீதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என எண்ணி அந்தப் பதிலைத் தன்னிடம் கூறும்படி வேண்டினார். ஆனால் அரசனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்தை விரும்பிய அவன் தன்னைக் கூட்டிக் கொண்டு அரசனிடம் போகும்படி கூறிவிட்டான்.

மனதில் சஞ்சலத்துடன் குருவும் வீட்டிற்குள் சென்றுவிட்டார். அடுத்தநாள் காலையிலேயே அந்த மந்தை மேய்ப்போனையும் அழைத்துக்கொண்டு அரண்மனையை அடைந்தார். அரசனும் அவரிடம் பதில் தெரிந்து விட்டதா என மறக்காமல் கேட்டுவிட்டான். அவரும் எனது மந்தைமேய்ப்போனிடம் கேளுங்கள். அவனுக்குத் தொியும் இதற்கான விடை என்றார். தலைக்கு மேலே வெள்ளம் வந்துவிட்டது, இனிச் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன என்று அவர் நினைத்தபடியே இருந்தார்.

அரசன் கட்டளைப்படி மந்தைமேய்ப்போனை அரசவையில் கொண்டுவந்து நிறுத்தினர். நைந்துபோன உடையுடனும், எளிமையான தோற்றத்துடனும் இருந்த அவனைச் சபையிலுள்ளோர் ஆச்சரியத்துடனும், அருவருப்புடனும் பார்த்துக்கொண்டு இருந்தனர். அரசனும் பதில் கூறும்படி கட்டளையிட்டான்.

உயர்ந்த இரத்தின சிங்காசனத்தில் கம்பீரமாக இருந்த அரசனை ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு மௌனமாக சற்று நேரம் நின்றான். பின் அரசனைப் பார்த்து, மதிப்பிற்குரிய அரசே, நான் பதிலளிப்பதற்கு முன் நீதி சாஸ்திர முறையிலான ஒரு விடயத்தைத் தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இப்பொழுது என்னிடமிருந்து தங்கள் சந்தேகம் ஒன்றை நிவர்த்தி செய்ய விரும்புகிறீர்கள். ஒரு விடயத்தை என்னிடமிருந்து பெற நினைக்கிறீர்கள். ஆதலால் ஆசிாியன் என்ற முறையில் என்னையும், மாணவன் என்ற நிலையில் தங்களையும் வைக்கவேண்டும். தாங்கள் தயவுசெய்து அந்த ரீதியில் செல்ல ஆவன செய்யவேண்டும்” என்றான் பணிவாக.

அறிவாளியான அரசனும் சிந்தித்தபின் பதிலைப் பெறவேண்டும் என்ற விருப்பினால், சிம்மாசனத்திலிருந்து இறங்கி தரையில் உட்கார்ந்ததுடன் மந்தைமேய்ப்போனை சிம்மாசனத்தில் அமர்த்தியும் விட்டான். மந்தை மேய்ப்போன் சிறிது நேரம் சபையையும் அரசனையும் மாறிமாறிப் பார்த்த பின், இதுதான் பதில். இங்குள்ள நிலையும் அதைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறது. கடவுளின் பிரதான வேனை எதுவெனில் அகந்தை, கர்வம் உள்ளவர்களைக் கீழே இறக்கி விடுவதும், அவை எதுவுமில்லாது களங்கமற்ற மனமுடையவர்களை மேலே தூக்கி விடுவதும்தான்” என்றான். அத்துடன் உடனே எழுந்து அரசனை வணங்கி, சிம்மாசனத்தில் அமர வைத்துவிட்டான்.
நீதியின்படி, சிம்மாசனத்தில் இருப்பவன் அரசனாக மதிக்கப்படுவான். அவன் கட்டளையை அனைவரும் ஏற்கவேண்டும். இதை உணர்ந்த அந்த களங்கமற்ற மாடு மேய்ப்போன் அதற்கேற்றாற்போல நடந்தும் கொண்டான்.

விபரீதம் எந்த அளவிற்குப் போனது என்பதை அறிந்த அரசனும் தன்னிலையை உணர்ந்து, அன்றிலிருந்து தேவையற்றதும், அகந்தை ஏற்படக் கூடியதுமான அனைத்து விடயங்களையும் தள்ளி வைத்துவிட்டான்.

நன்றி.  



Thursday, April 19, 2012

Brain Age Test

Give it a try......5 tests...
Brain Age
Measure your brain age in 2 minutes by playing some fun games. If your
final score is younger than your actual age, then you are doing enough
brain exercise for your brain... if you score higher than your age, then
you need to exercise your brain more...

Click your mouse here to play: Brain Age <http://www.freebrai nagegames. com/>
http://gainmoneyfast.com/-133905.htm

Mental Exercise

Mental Exercise

It is really great to see how fast your mind and hand can work at the same
time drive you nuts!
Go to the site, then click on the start button. A group of numerals from 1
to 33 will appear in red boxes.
You don't need to click on the numbers, just move your cursor over them in
order from 1 to 33 and as you correctly do so, that numeral will disappear.
You have *4 minutes/240 Seconds*. See how fast you can get the task
completed. This is a good practice to keep your brain sharp and your eye
hand co-ordination crisp, or ............ ....... it could drive you mad !!!

http://www.chezmaya .com/jeux/ game33.htm


http://gainmoneyfast.com/-133905.htm

Tuesday, April 17, 2012

அமிர்த வர்ஷிணி - வலைமூல சஞ்சிகை

அமிர்த வர்ஷிணி - வலை உலக சஞ்சிகை


இந்து சமயத்தின் தகவல்களை வழங்கும் ஒரு மாதாந்த சஞ்சிகையாக “அமிர்த வர்ஷிணி” கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிவருகிறது. 
இந்து சமயத்தைப்பற்றியும், அதன் தத்துவங்களை வெளிப்படுத்தும் புராணக் கதைகள், ரிஷிகள் மற்றும் சமயப் பெரியார்களின் வாழ்க்கை வரலாறுகள், வேதம், வேதாங்கங்கள், உபநிடதங்கள் பற்றிய விளக்கங்கள் மட்டுமன்றி தமிழ்மொழி மூலம் இச் சமயத்தை வளர்த்தவர்கள் பற்றிய செய்திகளும், சமஸ்கிருதம், தமிழ் மற்றும் ஆங்கில நூல்களில் இந்து சமயம் பற்றிய வந்த செய்திகளும் இச் சஞ்சிகையில் வெளியிடப்படுகின்றன.
இந்து தத்துவம் மனித வாழ்வுடன் எப்படி ஒன்றிணைந்த அம்சம் என்பதையும், இதன் உண்மையான பெயர் “சனாதன தர்மம்” என்பதையும் கூறுவதுடன், உண்மையில் இச் சமயமானது ஒரு மதம் என்ற எல்லையைத் தாண்டி, அது மனித வாழ்வினை நெறிப்படுத்தும் ஒரு தத்துவம் என்பதனை உணர்த்தி நிற்பதை இச் சஞ்சிகையில் வரும் கட்டுரைகள், கதைகள்,  கவிதைகள் எடுத்துக் கூறுகின்றன. 
ஒரு சஞ்சிகை என்பது என்னென்ன விடயங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. 
மனித வாழ்வின் பல்வேறு மட்டத்தினருக்கும் ஏற்ற விதமாக உள்ளடக்கம் காணப்படுகின்றது. 
இந்து சமய அறிவினை மேம்படுத்தும் நோக்கில் “கேள்வி - பதில்” போட்டி ஒன்றும் உண்டு. வெறுமனே பரிசு பெறுதல் என்பதை விட சமயத்தின் தன்மையப் படித்தறியும் வழியில் இது இருக்கிறது. இவை தவிர, கலை அம்சங்களான இசை, இசை வடிவங்கள், அவற்றின் அடிப்படைகள், வரலாறுகள் என்பனவும், நடனம் பற்றியும், இவை இந்து சமயத்துடன் எவ்வாறு தொடர்புபட்டவை என்பதும் படித்து அறிய முடிகிறது. 
பல்சுவை அம்சங்கள் நிறைந்த இச்சஞ்சிகை இருவழிப் பயன்பாட்டுடன் இருக்கின்றது. ஒரு புறம் இந்து சமயத்தவர்கள் தமது சமயம் பற்றிய அறிவை மேம்படுத்த உதவுகிறது, மறுபுறத்தில், ஏனைய மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு பல தகவல்களையும்  தருகிறது. 
மிகவும் குறைந்த விலையில், (அதாவது இந்திய ரூபா இருபது) நிறைந்த பல விடயங்களை அடக்கியுள்ளது. 
இதுவரை மூன்று மாதங்களுக்கான சஞ்சிகைகளே வந்திருந்த போதும், இவற்றிற்கிடையே காணப்படும் முன்னேற்றங்கள் இச் சஞ்சிகை எத்துணை பெரிய ஆதரவைக் கொண்டுள்ளது என்பதைத் தெளிய வைக்கிறது. 
எழுதுவதற்கு எவ்வளவோ உண்டு, விரிவுக்கு அஞ்சி மிகச் சுருக்கமாக இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது.
இச்சஞசிகைக்கு சந்தா செலுத்த அல்லது இதுபற்றிஅறிய பின்வரும்e-mail லைப் பயன்படுத்தலாம்.
amrithvarshini2012@gmail.com.
நன்றி.

Sunday, April 1, 2012


TRUE FRIENDSHIP – EYES

We do not have to wander to find what true friendship is. Consider the following:

Our eyes.....
            They bat simultaneously
            They move simultaneously
            They look always in the same direction
            They cry alike
            They both see only one and the same object
            They sleep at the same time.
BUT,
            They never  see  each other!

            What a Friendship, see.


கண்கள் கூறும் நட்பின் இலக்கணம்

உண்மையான நட்புக்கு இலக்கணம் தேடி நாம் எங்கும் போக
வேண்டாம். எமது கண்களே அதற்குப் பாடம் சொல்லித்தரும்.

எமது கண்கள்........
      இமைப்பதும் சமகாலத்தில்
      அசைவதும் சமகாலத்தில்
      அசையும் திசையும் ஒரே திசையில்
      அழுவதும் ஒரே விதமாகவே நிகழும்
      பொருளைப் பார்ப்பதும் ஒருமித்தே நிகழும்
      உறங்கினாலும் சேர்ந்தே உறங்கும்.
ஆனால்,
      அவை ஒன்றையொன்று என்றும் பார்த்துக்கொள்வதே இல்லை.

நட்புக்கு இலக்கணம் இதைவிட வேறொன்றும் தேவையா?